Skygain News

தமிழ்நாட்டின் இரு எதிர்க்கட்சி தலைவர்களும் இன்று டெல்லி பயணம்..!

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருக்கிறார். அவர் மட்டும் இல்லாமல் மற்றும் முதல்வர் ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறார்.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் பாலி தீவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டர். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் ஜி -20 நாடுகளின் மாநாடு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு ஜி- 20 அமைப்பு குறித்து விளக்கவும், அடுத்த ஆண்டு ஜி- 20 மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்தும் மாநில முதல்வர்களுடன் டெல்லியில் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடந்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மற்றும் பல்வேறு கட்சி அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு நாடு முழுவதும் 32 பிரிவுகளில் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டு இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. சென்னையில் ஜி 20 கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் இன்று இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருக்கிறார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More