புதுவை ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்த ஒருவர் விழுப்புரம் சாலையில் சுசுகி அக்சஸ் 125 என்ற வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வாகனத்தில் அதிக சத்தத்துடன் புகை வருவதை அறிந்த அவர் சாலையில் தடுப்புக்கட்டை ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு தப்பித்து ஓடினார்.
அவர் ஓடிய சிறிது நேரத்தில் இரு சக்கர வாகனம் முழுவதும் எறிந்து தீக்கிறையானது. இதனை அடுத்து அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பக்கத்து வீட்டில் இருந்த தண்ணியை எடுத்து வண்டியின் மீது ஊற்றி தீயை அனைத்தனர்.
சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென இருசக்கர வாகனம் தீப்பற்றி எந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.