ராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரியா (36). இவர் இவரது இரண்டு பெண் குழந்தைகளுடன் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு, மீண்டும் தனது ஊருக்கு செல்ல ஆரணி பேருந்து நிலையத்தில் மூன்றாம் நம்பர் அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.
அப்போது மேல்புதுபாக்கம் அருகே பேருந்து வந்ததும் அனைத்து பயணிகள் இறங்கி உள்ளனர்.

வாழைப்பந்தல் செல்ல ஜெயப்பிரியா மட்டும் பேருந்தில் இருந்ததால் அப்பகுதிக்கு பஸ் போகாது என நடத்துனர் சொல்லி உள்ளார்.
அதற்காக அந்த பெண் நடத்துன ரிடம் வாக்கு வாதம் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பேருந்து நடத்துனர் மீண்டும் ஆரணிக்கே அந்த பெண்ணை அழைத்து சென்று பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிக உடல் சோர்வில் இருந்த ஜெயப்பிரியா மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனை அறிந்து ஆத்திரமடைந்த வாழைப்பந்தல் கிராம பொதுமக்கள் மீண்டும் அந்த அரசு பேருந்து இரவு 7.30 மணிக்கு வாழைப்பந்தல் வந்த 3ம் நம்பர், 34ம் நம்பர், 20ம் நம்பர் ஆகிய மூன்று அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர். உடனே தகவல் அறிந்து வந்த வாழைப்பந்தல் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து ஆரணி போக்குவரத்து கழக பணிமனை அதிகாரி ரகுராமன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, இனிவரும் காலங்களில் இது போன்று நடைபெறாது என வாக்கு உறுதி அளித்ததின் பேரில் கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர்.