Skygain News

இலவசமாக பெட்ரோல் போட மறுத்ததால் கடுப்பான இளசுகள்…! மறுப்பு தெரிவித்த ஊழியர்களுக்கு நேர்ந்த சோகம்..

திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் பிரதான சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் திருப்பத்தூர் அப்பாய் தெருவை சேர்ந்தவர் ஷாகீர்(26) மற்றும் சிவகுமார் ஆகியோர் ஊழியராக பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள், வாகனத்திற்கு இலவசமாக பெட்ரோல் நிரம்ப்பும் படி அடாவடியாக கூறியுள்ளனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த ஷாகிர் மற்றும் சிவகுமாரை, அவர்கள் சரமாரியாக தாக்கி, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த ஷாகிர் மற்றும் சிவகுமார் ஆகியோர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஷாகிர் திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட திருப்பத்தூர் கவுதமபேட்டையை சேர்ந்த சபரிநாதன்(27), டி.எம்.சி காலனியை சேர்ந்த வினோத் குமார்(24) மற்றும் அப்பாய் தெருவை சேர்ந்த தவுபிக் (24) ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் பெட்ரோல் பங்க் ஊழியர்களை இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More