தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதற்கு தமிழக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தமிழக பாஜக குற்றம் சாட்டியுள்ளது .
இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது : திமுக கட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பட்ட பகலில் வங்கியில் நகை கொள்ளையடிக்கப்படுவது, வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது என திருட்டு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றனர் .
சாலையில் தனியாக நடந்து செல்லும் அப்பாவி பெண்களிடம் இருந்து செயின் பறிப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவது தமிழக மக்களும் கடும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது .
தமிழக முதல்வர் கஞ்சாவை ஒழிப்போம் என்று அறிக்கை விட்ட பிறகு தான் தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகமானது போல் தெரிகிறது. கொலை, கொள்ளை, கஞ்சா என தமிழகம் சீர்கெட்டும் தரங்கெட்டும் வருகிறது. கொலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுநபர்களுக்கு குளிர் விட்டு போய்விட்டது. எதற்கெடுத்தாலும் இதுதான் திராவிட மாடல் என்று சொல்லும் முதல்வர் அவர்கள் இதுபோன்ற சம்பவங்களுக்கு என்ன சொல்லப் போகிறார்.
தமிழக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுகிறார்கள். எனவே குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டப்படி கடுமையான தண்டனையை தர வேண்டும். அதற்கான முயற்சிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.