Skygain News

சுதந்திர தினவிழா அமுதப் பெரு விழாவையொட்டி தேசியக் கொடியை ஏந்தி தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் அணிவகுப்பு பேரணி நடத்தினர்..

75வது சுதந்திர தினவிழா அமுதப் பெருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் தேசிய கொடியேந்தி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியிலிருந்து துவங்கிய பேரணி தூத்துக்குடி- பாளைரோடு வழியாக குரூஸ் பர்னாந்து சிலை அருகே பேரணியை நிறைவு செய்யப்பட்டது.

பேரணியில் ஏ.டி.எஸ்.பி. கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி. சத்தியராஜ், வடபாபாகம் காவல் ஆய்வாளர் ரவி சுஜின் ஜோஸ், மத்திய பாகம் ஆய்வாளர் ஐயப்பன், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலன், ஆயுதபடை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து,
போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் முருகபெருமாள் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் பேரணியில் கலந்து கொண்டனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More