சேலத்தில் சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்ய எடுத்து வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை விற்பனை செய்ய மூன்று லட்சம் ரூபாய் பேரம் பேசி இளம் பெண்ணின் உறவினர் வளர்மதி மூலம் குழந்தை சேலம் எடுத்துவரப்பட்டுள்ளது.
ஈரோட்டை சேர்ந்த இடைத்தரகர் லதா மற்றும் அவரது கணவர் மதியழகன் ஆகியோர் குழந்தையை வாங்கி செல்வதற்காக சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதிக்கு வந்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் தகவலின் பேரில் காவல்துறையினர் சாதாரண உடையில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வளர்மதியிடம் இருந்து குழந்தையை வாங்கி செல்ல வந்த இடைத்தரகர்கள் லதா மற்றும் அவரது கணவர் குழந்தையை வாங்க முயற்சி செய்யும்போது கையும் களவுமாக பிடிபட்டனர்.
பின்னர் அவர்களிடமிருந்து பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கிருந்து குழந்தைகள் நல காப்பாற்றுவதற்கு குழந்தை பாதுகாப்பாக கொடுத்து அனுப்பப்பட்டது. சட்டவிரோதமாக குழந்தையை கடத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மூவரையும் நீதிமன்ற காவலில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
லதா மற்றும் அவரது கணவர் இருவரும் தொடர்ந்து குழந்தைகளை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.