சிறுமியின் தாயின் கள்ளக்காதலன் பிரேம்குமார் (20) போக்சோ சட்டத்தின் கீழ் கோட்டக்குப்பம் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த உப்பு வேலுரை சேர்ந்த பிரேம்குமார், (20 வயது ) இவர் அதே பகுதியில் கணவரை பிரிந்து வாழும் வாழும் பெண்ணிடம் கள்ளக்காதல் வைத்திருந்துள்ளார்.
கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக அந்த பெண்ணின் 6 வயது மகளுக்கு பிரேம்குமார் ஐஸ் கீரிம் அடிக்கடி வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அந்த சிறுமியின் தாயும் கண்டும் காணாமலும் இருந்து வந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிலர் சிறுமியின் தந்தைக்கு தெரிவித்துள்ளனர். உடனே அவர் சிறுமியை அவரது உறவினர் வீட்டில் தங்கவைத்துள்ளார்.
பின்னர் இது குறித்து சிறுமியின் தந்தை கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுகன்யா விசாரணை செய்ததில் சிறுமிக்கு பல முறை பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. அதன் பின் மகளிர் போலீசார் பிரேம்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
கள்ளக்காதலன் கேட்டதால் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் தாயே இதுபோன்ற ஈன செயல்களில் உட்படுத்தியது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.