தொடர்ந்து கன மழை பெய்து வரும் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 150 கன அடியாக தொடங்கியுள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 20.29 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2675 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 150 கன அடியாகவும் உள்ளது. நேற்று முதல் கன மழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 150 கன அடியாக தொடங்கியுள்ளது.
மேலும் இன்றைய தினத்தில் கனமழை நீடிக்கும் பட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர், நேமம் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளும் நீர் நிறைந்து காணப்படுவதால் அங்கிருந்தும் உபரி நீர் மற்றும் மழை நீர் அதிக அளவில் வரும் என்பதால் இன்றைய தினத்தில் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் 23 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தி கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.