உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் நகரில் உள்ள அக்னி தீர்த்த கடற்கரை கடந்த சில ஆண்டுகளாக தூய்மையற்று இருப்பதால் உள்ளூர் மட்டும் வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு உடனே ஊரை விட்டு கிளம்பி சென்று விடுவார்கள் .
ஆனால் கடந்த ஆறு மாத காலமாக ராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் கே இ நாசருக்கானின் தீவிர முயற்சியினால் அக்னி தீர்த்த கடற்கரை மெரினா கடற்கரைக்கு நிகராக மாற்றப்பட்டுள்ளது . தினமும் தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை செய்யப்பட்டு வருவதால் வெளியூர் மற்றும் உள்ளூர் பொதுமக்களுக்கும் மாலை நேரங்களில் கடற்கரை வந்து செல்கின்றனர் .