ரயில் பயணிகள் தங்களுக்கான உணவுகளை இனி வாட்ஸ் ஆப் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என IRCTC அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் தங்களது வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து IRCTC – யின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி உணவு ஆர்டர் செய்யலாம் என்றும், ஆர்டர் செய்தவரின் இருக்கைக்கே உணவு டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் இணையதளம் வாயிலாக டிக்கெட் பதிவு செய்யும் பொழுது அதன் விவரங்கள் whatsapp எண்ணில் தெரியப்படுத்தப்படும் என்றும் பிறகு, இதற்கென்று உள்ள தனி இணையதள முகவரியில் சென்று உணவுகளை ஆர்டர் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
