மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியானது.ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.இதன் காரணமாக இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பாக உதயநிதி வாங்கியுள்ளாராம். சமீபத்தில் இது பற்றி பேசிய உதயநிதி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தான் வாங்கியுள்ளதாகவும், அடுத்தாண்டு ஏப்ரல் 28 இப்படம் மிகப்பிரமாண்டமாக வெளியாக இருப்பதாகவும் தெரிவித்தார் உதயநிதி.