புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை வைத்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து உரிய முடிவெடுப்பார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் புதுச்சேரி மாநில அரசின் மேம்பாட்டுக்கு மத்திய அரசின் சிறப்பு நிதியாக ரு.1,400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் புதுச்சேரியில் வேலை வாய்ப்பை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏற்கனவே 400 பேருக்கு காவல் துறையில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 10 ஆயிரம்பேருக்கு வேலை கொடுக்க முடிவு செய்து முதற்கட்டமாக 1,400 பேருக்கு வேலை கொடுக்க முடிவு செய்யபபப்ட்டுள்ளது என்றவர், புதுச்சேரியில் 750 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது என்று தெரிவித்த மத்திய அமைச்சர் எல்.முருகன் புதுச்சேரியில் ரூ.500 கோடியில் மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கபப்ட்டு வருவதாகவும், புதுச்சேரியில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்கபப்ட்டுள்ளது, என்றவர் மீனவர்களை கைது செய்வது வாடிக்கையாகின்றது அதே நேரம் அவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றோம் என்றவர் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுகின்றது என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் ஆளுநர்கள் இந்திய அரசியலைமைக்குட்பட்டு செயல்படுகின்றார். அவர் கருத்து சொல்லக்கூடாது என்று எப்படி கேட்க முடியும்? ஆளுநர்கள் திமுகவின் கைப்பாவையாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அதனால் ஆளுநரை மாற்றிவிட்டு அவர்களுக்கு ஏற்றவர்களை ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என கேட்பது நடக்காது என்றவர் தமிழகத்தில் திமுக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு ஆளுநர் கேள்வி கேட்கின்றார் ஆனால் அதற்காக அவரை மாற்ற வேண்டும் என்று கேட்பதா என கேள்வியெழுப்பிய எல்.முருகன் புதுச்சேரியில் ஆளுநர் மற்றும் முதல்வர் இணைந்து பணியாற்றுகின்றார்கள் என்றார்.
மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தான் உரிய முடிவெடுக்கும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.