Skygain News

யார் வெச்ச கண்ணோ தொடர்ந்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்..!

காந்தி நகரில் இருந்து மும்பை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் நேற்று மாலையில் மாடு மீது மோதியது. இதனால் ரயிலின் முன்பக்க பேனலில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் தொடங்கி 2 மாதங்களே ஆகும் நிலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது 4வது முறையாக மீட்டும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் விபத்துலகியுள்ளது.

இதுகுறித்து மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ‘சுமித் தாக்கூர்’ நேற்று மாலையில் 6. 23 மணியளவில் குஜராத்தின் உத்வாடா – வாபி இடையே லெவல் கிராசிங் கேட் எண் 87 க்கு அருகில் கால்நடை மீது ரயில் மோதியது. இதனால் ரயிலின் முன்பக்க முன் பகுதியில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி எந்த செயல்பாட்டு சிக்கல்களும் இல்லை. இந்த சேதம் இரவில் சரியாகிவிடும். சிறிது நேரம் நிறுத்தப்பட்ட ரயில் பின்னர் 6.35 மணிக்கு மீண்டும் பயணத்தை தொடங்கி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து நான்காவது முறையாக மாடு மீது மோதி வந்தே பாரத் ரயில் சேதம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More