மணிரத்னம் பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவர் முயற்சிக்கு அப்போது பலன் கிடைக்கவில்லை. அதன் காரணமாக வெவ்வேறு கதையை படமாகிக்கொண்டிருந்த மணிரத்னம் அவ்வப்போது பொன்னியின் செல்வன் படத்திற்கான முயற்சிகளையும் செய்து வந்தார்.
அவரின் முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. லைக்கா மற்றும் மணிரத்னம் இணைந்து இணைந்து பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளனர். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் தற்போது அளித்து இருக்கும் பேட்டியில் முன்பு நடிகர் விஜய், மகேஷ் பாபு உள்ளிட்டவர்கள் பொன்னியின் செல்வனில் நடிக்க இருந்ததாக தெரிவித்து இருக்கிறார்.
விஜய் வந்தியத்தேவன் ரோலிலும், மகேஷ் பாபு அருண்மொழிவர்மன் ரோலிலும் நடிக்க இருந்ததாக அவர் கூறி இருக்கிறார். விஜய் நடிக்க இருந்த ரோலில் தற்போது கார்த்தி நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.