கடந்த மூன்று ஆண்டுகளாக விக்ரமின் படங்கள் திரையில் வெளியாகாததால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். அந்த வருத்தத்தை எல்லாம் போக்கவே தற்போது கோப்ரா திரைப்படம் திரையில் வெளியாகவுள்ளது. இருமுகன் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
எனவே தற்போது கட்டாய வெற்றியை நோக்கி வேலைசெய்து வரும் விக்ரம் கோப்ரா படத்தின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகும் கோப்ரா படத்தின் முன்பதிவு அமோகமாக இருப்பதால் இப்படத்தின் முதல் நாள் வசூலில் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கோப்ரா படத்திற்காக விக்ரமிற்கு 20 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் விக்ரம் போன்ற நடிகர்களுக்கு இந்த சம்பளம் குறைவானதே என கருத்து தெரிவித்து வருகின்றனர். விக்ரம் போன்ற பல ஆண்டுகாலமாக திரைத்துறையில் பல வெற்றிகளை பதிவு செய்தவருக்கு 20 கோடி சம்பளம் குறைவானதாம்.
கோப்ரா படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்புகளில் வந்து அசத்தும் நிலையிலும் சம்பளம் சரியாக கொடுக்கப்படவில்லை என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் கோப்ரா படத்தின் வெற்றி விக்ரமின் சம்பளத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது