இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆசிய கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வென்றது. டாஸ் வென்று முதலில் பௌலிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணியின் கேப்டனுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு பக்கம் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் பௌண்டரிகளாக விலாச மறுபக்கம் பாகிஸ்தான் பீல்டர்கள் தொடர்ந்து சொதப்பினர். ஆனால் பாகிஸ்தான் அணியின் ஸ்பின்னர்கள் வந்ததும் ஆட்டத்தின் போக்கு சற்று மாறியது.
சீரான இடைவேளையில் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோஹ்லி தனது வழக்கமான ஆட்டத்தை ஆடி அரை சதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விராட் கோலியிடம், தோனி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ‘‘நான் டெஸ்ட் அணிக் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு, எனக்கு மெசேஜ் அனுப்பியது தோனி மட்டும்தான்.
எனது செல்போன் எண் நிறைய பேரிடம் இருக்கிறது. ஆனால், யாரும் எனக்கு மெசேஜ் அனுப்பவில்லை. தோனி மீது நான் கொண்டிருந்த மரியாதை, மதிப்பு அனைத்தும் உண்மையானது. என்னால் அவர் பாதுகாப்பானவராக உணர்ந்ததில்லை. அதேபோல் அவரால் நான் பாதுகாப்பானவராக உணர்ந்ததில்லை’’ எனக் கூறினார்.