என்னதான் இந்திய அணி ஆசிய கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறினாலும் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கோலி சதம் அடித்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.
இந்திய அணியில் பல மாற்றங்கள் இருந்தன. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ராகுல் கேப்டனாக செயல்பட்டார். கோலி ராகுலுடன் ஓபன் செய்தார். ஒப்பனராக களமிறங்கிய கோலி சதமடித்து விளாசினார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கோலி சதமடித்ததால் ரசிகர்கள் முதல் வீரர்கள் வரை அனைவரும் கோலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுபற்றி பேசிய கோலி ,நான் மீண்டும் எனது தொடக்க காலத்தில் இருந்ததை போன்றே நினைத்துக்கொண்டு புத்துணர்ச்சியாக களமிறங்கினேன். நான் விளையாடிய சிறந்த இன்னிங்ஸ்களின் வீடியோக்களை மீண்டும் மீண்டும் பார்த்து, ஆரம்ப கட்டங்களில் எப்படி பந்தை அனுகினேன் என்பதை உற்று கவனித்தேன். அவை அனைத்தையும் மீண்டும் எனக்குள் கொண்டு வந்துள்ளேன். இதுதான் எனது மாற்றத்திற்கான காரணம் என்றார் விராட் கோலி