நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 3வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார், 49 பந்துகளில் சதம் விளாசி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.32 பந்துகளில் அரைசதம் அடித்திருந்த சூர்யகுமார், அடுத்த 17 பந்துகளில் சதம் விளாசி இந்திய அணியின் ஸ்கோரை எங்கேயோ எடுத்து சென்றார்.
அதுமட்டுமல்லாமல் இந்தப் போட்டியில் 51 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் 111 ரன்களை விளாசினார்.இந்நிலையில் இதுபற்றி விராட் கோலி கூறியது என்னவென்றால், தான் ஏன் உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன் என்பதை அனைவருக்கும் நிரூபித்து வருகிறார்.
Numero Uno showing why he's the best in the world. Didn't watch it live but I'm sure this was another video game innings by him. 😂 @surya_14kumar
— Virat Kohli (@imVkohli) November 20, 2022
சூர்யகுமாரின் ஆட்டத்தை நேரலையில் பார்க்கவில்லை. ஆனால் இது அவருடைய மற்றொரு வீடியோ கேம் இன்னிங்ஸ் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று கிண்டலாகவும், உண்மையாகவும் பதிவிட்டுள்ளார்.