முகப்பருக்களால் முகத்தை வெளியே காமிக்கவே அச்சப்படுவோர் வேப்பங்கொழுந்து, குப்பைமேனி இலை, விரலிமஞ்சள் அரைத்து பூசி உலரவிட்டு கழுவி வந்தால் பருக்கள் காணாமல் போகும் .
அதேபோல், அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்துவர முகப்பருக்கள் முகத்தை விட்டே ஓடி விடும்
அம்மான் பச்சரிசி பாலை பருக்கள் மீது தடவி வர பருக்கள் உரு தெரியாமல் மறையும்.
வெள்ளைப்பூண்டும், துத்தி இலையும் நறுக்கி நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி தினசரி பரு மீது தடவ பருக்கள் அலறியடித்து கொண்டு ஓடிவிடும் .
கடற்சங்கை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவிவர இரண்டு நாட்களில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும் .
சந்தனம் முகத்தில அடிக்கடி பூசி காயவிட்டு முகம் கழுவ பருக்கள் குணமாகி முகம் பொலிவுடன் காணப்படும்
சந்தனக்கட்டையை எலும்பிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி வந்தால் பருக்கள் காணாமல் போகும் .
ஜாதிக்காய், சந்தனம், மிளகு சேர்த்து அரைத்து தடவ பருக்கள் குணமாகிவிடும் .