தமிழ் சினிமாவில் குணசித்ர நடிகராக வலம் வந்தவர் நடிகர் பயில்வான் . தற்போது பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் பல டிஜிட்டல் மற்றும் டிவி சேனல்களுக்கு ஆபாச விமர்சகராக இருந்துவருகிறார் .
இந்நிலையில் பார்த்திபன் நடித்து இயக்கி இருக்கும் இரவின் நிழல் திரைப்படத்தில் நிர்வாண காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார் ரேகா நாயர். இதுகுறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் திரைவிமர்சனத்தில் ரேகா நாயரை படு மோசமாக விமர்சித்துள்ளார் .
இந்நிலையில் சென்னை திருவான்மியூர் கடற்கரையில் பயில்வான் ரங்கநாதன் வாக்கிங் சென்றுள்ளார் . அப்போது ரேகா நாயரும் அங்கே வாக்கிங் சென்றிருக்கிறார். பயில்வான் ரங்கநாதனை பார்த்த ரேகா, என்னை பற்றி எதற்கு இப்படி மோசமாக விமர்சிக்கிறீர்கள்? என்று கேட்க, இப்படி மோசமாக நடித்தால் அப்படித்தான் விமர்சனம் செய்வேன் என்று தெனாவெட்டாக பதில் சொல்ல, வாக்குவாதம் நடுரோட்டில் வாக்குவாதம் முற்றியது .

நான் நிர்வாணமாக நடிப்பேன் அதைப்பற்றி கேட்பதற்கு நீ யார்? நான் உன் பொண்டாட்டியும் இல்ல ,மகளும் இல்ல. நீ எதுக்கு என்னை கண்டிக்கிற? என்று காட்டு கத்து கத்த ஒரு கட்டத்தில் பயில்வானை அடிக்க பாய்ந்திருக்கிறார் ரேகா . பின்னர் பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இது குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது : ’’கடற்கரையில் என்னை பார்த்த ரேகா, நான் நிர்வாணமாகத் தான் நடிப்பேன் என்று சொல்லிவிட்டு அங்கேயே ஆடையை கழற்ற முயன்றார். நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகலாம் வா என்று சொன்னேன். அதன் பின்னர் தான் அவர் அங்கிருந்து போனார்’’ என்கிறார்.
இது குறித்து ரேகா நாயர் கூறியதாவது : ’’நான் அந்த கடற்கரைக்கு அதிகமாக செல்வதில்லை . எதேச்சையாகத்தான் சென்றேன் . அப்போது அவர் வந்ததால் என்னைப் பற்றி எதற்கு அப்படி கடுமையாக விமர்சித்தீர்கள் என்று கேட்டபோது அது விவாதமாக மாறிவிட்டது . வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசலாமா என்று கேட்டேன். இனிமே என்னை பற்றி இப்படி பேசினால் செருப்பு பிஞ்சிடும்’’ என்று சொல்லி எச்சரித்து விட்டு வந்திருக்கிறேன் என்கிறார்.