ஆப்பிரிக்காவில் உள்ள குடியரசு நாடான கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெற்ற அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ரெய்லா ஒடிங்காவை விட 50.5 சதவீத அதிகமாக வாக்குகளை வென்று வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அந்த நாட்டின் 5-வது அதிபர் என்று பொறுப்பேற்றினார்.

இந்நிலையில் கென்யாவின் அதிபராக இருந்து பின் பதவி விலகும் உஹுரு கென்யாட்டாவின் துணை அதிபராக வில்லியம் ரூட்டோ இருந்தார். இனிடையே, இந்த வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்நாட்டு எதிர்க்கட்சி மக்கள் கென்யாவில் உள்ள உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவேற்றினர் ஆனால், அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் கடந்த வாரம் அதை நிராகரித்தது.

இதையடுத்து, துணை அதிபராக இருந்த வில்லியம் ரூட்டோ தற்போது அதிபராக பதவியேற்று கொண்டார். இன்று நடந்த பதவியேற்பு விழாவில் உஹுரு கென்யாட்டாவும் வில்லியம் ரூட்டோவும் கைகுலுக்கி பேசிக் கொண்டது அந்நாட்டு மக்களிடம் மகிழ்ச்சியை எற்படுத்தியது.