அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் அல் கயிதா தலைவர் அல் ஜவாஹிரி கொல்லப்பட்ட நிலையில், அவரது முழு பின்னணி குறித்து தற்போது பார்ப்போம்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் வசித்து வந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் அல் ஜவாஹிரி. இவரது தாத்தா அல் அசார், கெய்ரோவில் உள்ள புகழ்பெற்ற மசூதி ஒன்றின் இமாமாக இருந்தவர்.
சிறு வயதிலேயே இஸ்லாத்தின்பால் தீவிர பற்று கொண்ட அல் ஜவாஹிரி, முஸ்லிம் பிரதர்ஹூட் அமைப்பில் இணைந்து தனது 15வது வயதில் சிறை சென்றார் .

தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட வழக்கில் கடந்த 1981ல் கைது செய்யப்ப்டட அல் ஜவாஹிரி, 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார் . படித்து பட்டம் பெற்று கண் மருத்துவரான அல் ஜவாஹிரி, எகிப்தில் தூய இஸ்லாமிய ஆட்சியை நிருவுவதற்காக தீவிர முனைப்பு காட்டினார் .
1986ல் பின் லேடனை சந்தித்த அல் ஜவாஹிரி, அதன் பின் அவரோடு இணைந்து பல நாசா வேளைகளில் செயல்பட்டார் .

1993ல் எகிப்து இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவராக இருந்த அல் ஜவாஹிரி, அப்போதைய எகிப்து அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தார்.
ஜிகாத் மூலம் 1,200க்கும் மேற்பட்ட எகிப்தியர்கள் கொல்லப்பட்டதில் அல் ஜவாஹிரிக்கு முக்கிய பங்கு இருந்துள்ளது .

1998ல் எகிப்து இஸ்லாமிய ஜிகாத் அமைப்பை அல் கயிதாவுடன் இணைத்தார் அல் ஜவாஹிரி.
நைரோபி, கென்யா, தான்சானியா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது 1998ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் சுமார் 224 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவங்களில் அல் ஜவாஹிரிக்கு மிக முக்கிய தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த கோர தாக்குதலுக்கு பின் அல் ஜவாஹிரி சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

உலக நாடுகள் தேடும் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்டு அவர் குறித்த தகவலை தருபவர்களுக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் வெகுமதியாக வழங்கப்படும் என அமெரிக்க அரசு அப்போதே அறிவித்தது.
2003ல் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 9 அமெரிக்கர்கள் உள்பட 23 பேர் கொல்லப்பட்டனர். இதுவும் அல் ஜவாஹிரி தலைமையின் கீழ் நடத்தப்பட்ட தாக்குதல் .
அல் ஜவாஹிரி எங்கிருக்கிறார் என்பது நீண்ட நாட்களாக மிகுந்த ரகசியமாக இருந்தது. எனினும், அவர் ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இருக்கக்கூடும் என அமரிக்க படையால் கணிக்கப்பட்டது.

அல் ஜவாஹிரியை கொல்லும் நோக்கில் 2006ல் ஆப்கனிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியது. இதில் அல் கயிதாவைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். எனினும், அல் ஜவாஹிரி தப்பினார்.
2011ல் பின் லேடனை அமெரிக்கா கொன்றதை அடுத்து அல் கயிதா அமைப்பின் தலைவரானார் அல் ஜவாஹிரி.
அமெரிக்காவின் எலிமினேட்டர் லிஸ்டில் இருந்த அல் ஜவாஹிரி ஜூலை 31ம் தேதி வான் தாக்குதலில் தனது 71வது வயதில் கொல்லப்பட்டார்.