சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் வரை நீடித்தது .
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின்னர் போயஸ் கார்டனில் வைத்து நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்ததாக தெரிவித்தார். மேலும் அரசியல் குறித்து பேசப்பட்டதா என்ற கேள்விக்கு, அரசியல் ரீதியாக பேசினோம், ஆனால் என்ன பேசினோம் என்பது குறித்து சொல்ல மாட்டேன் என்றும், மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார் .
மேலும், தமிழக மக்களின் கடின உழைப்பு, நேர்மை ஆகியவை மிகவும் பிடித்திருப்பதாக ஆளுநர் கூறியதாக தெரிவித்தார். ஆன்மீகம், கடவுள் நம்பிக்கை குறித்து பேசியதாகவும் கூறினார்.