Skygain News

ஆளுநருடனான திடீர் சந்திப்பு எதற்கு..? விளக்கம் கொடுத்த சூப்பர் ஸ்டார்…

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் வரை நீடித்தது .

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின்னர் போயஸ் கார்டனில் வைத்து நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்ததாக தெரிவித்தார். மேலும் அரசியல் குறித்து பேசப்பட்டதா என்ற கேள்விக்கு, அரசியல் ரீதியாக பேசினோம், ஆனால் என்ன பேசினோம் என்பது குறித்து சொல்ல மாட்டேன் என்றும், மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார் .

மேலும், தமிழக மக்களின் கடின உழைப்பு, நேர்மை ஆகியவை மிகவும் பிடித்திருப்பதாக ஆளுநர் கூறியதாக தெரிவித்தார். ஆன்மீகம், கடவுள் நம்பிக்கை குறித்து பேசியதாகவும் கூறினார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More