ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று உலகம் உற்று நோக்கும் முக்கிய ஆடம் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட தொடர் நேற்று கோலாகலமாக உரிய கொரோனா கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது. டி20 வடிவில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 சிறப்பான தரமான அணிகள் பங்கேற்றுள்ளன.
துபாயில் நேற்றிரவு நடைபெற்ற முதல் லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், அதில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இதேபோல் துபாயில் இன்றிரவு நடைபெறும் லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த முக்கிய தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது.
பொதுவாக எந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்களாக இருந்தாலும் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே எந்த வேலையாக இருந்தாலும் அதே அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு அனைவரும் டிவி முன் பாப்கானுடன் அமர்ந்து விடுவார்கள் .
அதிலும் கடந்த டி20 உலக கோப்பை போட்டியின் போது இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் படு தோல்வியை சந்தித்தது . இதனால் இன்று நடைபெறும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி வெறித்தமாக ஆடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது .
இந்நிலையில் இன்று நடக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்