Skygain News

உலக மீனவர் தின கொண்டாட்டம் பள்ளம் மீனவ கிராமத்தில் கடலுக்கு மலர் தூவி பிராத்தனை..!

ஆண்டுதோறும் நவம்பர் 21 உலக மீனவர்தினமாக குமரி மாவட்டத்திலும் உலக மீனவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையில் 48 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் லட்சக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர் தினத்தையொட்டி கடலோர கிராமங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் படகுகள் அர்ச்சிப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

மீனவர் தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள பள்ளம் துறையில் தேவலாய பங்குதந்தை சூசை ஆன்றனி தலைமையில் புனித மத்தேயு ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து கடற்கரைக்கு ஊர்வலமாக சென்ற மீனவர்கள் படகுகளுக்கு அர்ச்சிப்பு செய்து வழிபட்டனர். மீன்பிடி உபகரணங்களுக்கும் பூஜை செய்யப்பட்டது.

கடலில் மலர் தூவியும் வணங்கினர். பெண்கள் ஆரத்தி எடுத்தனர். கேக் வெட்டி மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.மீனவர் தினத்தில் தூண்டில்வளைவு அமைத்து தரவேண்டும் ஹெலிகாப்டர் தளம் அமைத்துதரவேண்டும் போன்ற கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றி தரவேண்டும் என மீனவர் கோரிக்கை வைத்தனர்‌ கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம் உள்ளிட்ட மீனவர்கள் அதிகம் வசிக்கின்ற கிராம பகுதிகளிலும் மீனவர் தின கொண்டாடட்டங்கள் நடைபெறுகிறது.

குளச்சல், ராஜாக்கமங்கலம், கொட்டில்பாடு, குறும்பனை, வாணியக்குடி, தூத்தூர் மண்டல மீனவ கிராமங்களிலும் மீனவர் தின கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. மீனவர் அமைப்புகள் சார்பில் பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் போன்றவையும் கடற்கரை கிராமங்களில் நடைபெறுகிறது மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More