Skygain News

முதலாம் உலகப்போர் 104-ஆம் ஆண்டு நினைவு தினம்: உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி…

முதலாம் உலகப்போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரியில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்ச் போர்வீரர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதலாம் உலகப்போர் நினைவு தினம் புதுச்சேரியில் இன்று அனுசரிக்கப்படுகிறது. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்ச் போர்வீரர் நினைவு சின்னத்தில் முதலாம் உலகப்போரின்போது உயிர்நீத்த வீரர்களுக்கும், பிரான்ஸ் நாட்டு மக்களுக்கும் அஞ்சலி செலுத்துப்பட்டது. போர்வீரர் நினவு சின்னத்தில் பிரரன்ஸ் நாட்டிற்கான இந்திய தூதர் லிஸ் டரல்வபரட் பரர்வரா, புதுச்சேரி அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் வல்லவன் உள்ளிட்ட பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் மற்றும் முன்னாள் பிரெஞ்சு ராணுவ அதிகாரிகள் ஆகியோர் மலர் வளியம் வைத்து போரில் உயிர்நீத்த வீரார்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பிரெஞ்ச் முன்னாள் ராணுவ வீரர்கள், புதுச்சேரியில் வாழும் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் இந்திய மற்றும் பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More