Skygain News

குடும்ப பிரச்சினை காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் தீவிர விசாரணை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சென்னசமுத்திரம் கிராமம் டோல்கேட் தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் அமிர்தவல்லிக்கும் கடந்த 2020 ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் இருவருக்கும் சிறு சிறு குடும்ப பிரச்சனை காரணமாக கார்த்திக் அமிர்தவல்லிடம் அடிக்கடி சண்டையிட்ட வந்த நிலையில் அவர் அவரது அம்மா வீட்டிற்கு கிளம்பி உள்ளார் இதனை அடுத்து கார்த்திக் நேற்று முழுவதும் நன்றாக மது குடுத்திட்டு அதீத போதையில் வீட்டிற்கு வந்த அவர் வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More