Skygain News

வாலாஜாபேட்டை சுந்தர விநாயகர் ஆலயத்தில் சண்முகநாத சுப்பிரமணிய சுவாமி சூரசம்காரம் நிகழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு ரோட்டில் உள்ள அருள்மிகு சுந்தர விநாயகர் ஆலயத்தில் சண்முகநாத சுப்பிரமணிய சுவாமி திருகோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது

அதை முன்னிட்டு கோவிலில் சண்முகநாத முருக பெருமானுக்கு ஐந்து நாட்கள் மிக விசேஷ பூஜைகள் மற்றும் பல்வேறு வடிவில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார்.

அதை தொடர்ந்து இன்று ஆறாம் நாளில் காலையில் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் என 16 வகையிலான திரவியங்களைக் கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை கட்டப்பட்டது பின்னர் மாலையில் கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது.

இதற்காக உற்சவர் சண்முகநாத சுப்பிரமணிய சுவாமி ஆறுமுகங்களை கொண்டு கோவிலின் கிரிவலப்பாதையில் வலம் வந்து சூரபத்ம அசுரனை சுப்பிரமணிய சுவாமி வேல் கொண்டு அழிக்கும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது கோவிலில் கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களின் அரோகரா அரோகரா கோஷம் எழுப்பியவாறு பக்தி பரவசம் அடைந்தனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More