கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுக்கும்மல் பகுதியை சேர்ந்த சுனில் – சோபியா தம்பதியரின் மூத்த மகன் அஸ்வின் ,அஸ்வின் குழித்துறை அருகே அதங்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
கடந்த மாதம் 24 ம் தேதி மாணவன் அஸ்வினுக்கு மதியம் உணவு இடைவெளியில் சக மாணவர் ஒருவர்
குளிர்பானம் குடிக்க கொடுத்துள்ளார்,அஸ்வினும் வாங்கி குடித்த நிலையில் வீட்டிற்கு சென்ற மாணவனுக்கு வயிறு வலி எடுத்துள்ளது .
இதை தொடர்ந்து பெற்றோர்கள் மாணவனை அழைத்து கொண்டு மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது ,குளிர்பானத்தில் ஆசிட் தன்மை அதிகம் இருந்ததால் ,குடல் ,தொண்டை மற்றும் இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு . மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்க பட்டிருந்த மாணவன் அஸ்வின் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.