வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கிகள்..! அதிகரிக்கும் கள்ளத்துப்பாக்கிகள் விற்பனை…
தர்மபுரி மாவட்டத்தில் 50 லிருந்து 60 நாட்டுத்துப்பாக்கிகள் கள்ளத்தனமாக புழக்கத்திலிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து எஸ்பி கலைச்செல்வன் உத்தரவின்பேரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் மலை அடிவார கிராமங்களில் நாட்டுத்துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் இல்லையென்றால் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலிசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனையடுத்து தொப்பூர் போலிஸ் லிமிட்டிற்க்குட்பட்ட கஸ்தூரிகோம்பை கிராமம் அருகே 2 நாட்டுத்துப்பாக்கி மற்றும் 1 ஏர்கன்னை மர்ம நபர்கள் வீசிச்சென்றனர். தகவல் அறிந்த …